ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே சிறந்த வழி என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மே 1ம் தேதி முதல் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்தார்கள். ஆனால், இன்னும் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அதே சமயம் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி கிடைப்பதாகச் சொல்கிறார்கள். பணம் செலுத்தி போட வேண்டும் என்பதால் மக்களிடம் இன்னும் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. அனைவருக்குமே இலவச தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இதனிடையே, 18 வயதிற்கு மேற்பட்ட சினிமா பிரபலங்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். நடிகர்கள் கவுதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண், சூரி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா பாண்டியன், சாக்ஷி அகர்வால், இயக்குனர்ள் விக்னேஷ் சிவன், திரு, டிவி பிரபலங்கள் திவ்யதர்ஷினி, கனி உள்ளிட்ட சிலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்.
சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.