பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியிருந்தார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமல்ல அரசியல் அரங்கிலும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக தி வேக்ஸின் வார் என்கிற படத்தை இயக்கினார் விவேக் அக்னிஹோத்ரி. இந்தியா நடத்திய ஒரு யுத்தத்தில் நடைபெற்ற அறியப்படாத சில நிகழ்வுகளும், அந்த யுத்தத்தில் எப்படி அறிவியல்பூர்வமாக தைரியமாக மிகப்பெரிய வெற்றியை இந்தியா பெற்றது என்பது பற்றியும் இந்த படத்தில் அவர் கூறியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியான இந்த படம் வெளியான நாளிலிருந்து எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் இப்போது வரை வெறும் எட்டு கோடி என்கிற அளவிலேயே வசூலித்து மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் அவரது இரண்டாவது படம் இன்னும் பத்து கோடியை கூட தொடுவதற்கு திணறுகிறது என்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான்.