300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பதான், ஜவான் படங்களின் பெரிய வெற்றி ஆயிரம் கோடியை தாண்டிய வசூல் இவற்றால் இந்தியாவின் நம்பர் ஒன் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். சமீப ஆண்டுகளாக சரிந்து கிடந்த பாலிவுட் சினிமாவை இந்த இரண்டு படங்களும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மிரட்டல்களும் அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று ஷாரூக்கான் மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. “முழு நேரமும் ஷாரூக்கானுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரிடம் எம்பி 5 எந்திர துப்பாக்கிகள். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கிளோக் பிஸ்டல்கள் இருக்கும். ஷாரூக்கான் வெளியில் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் செல்வார்கள். இது தவிர ஷாரூக்கான் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 4 போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்” என்று சிறப்பு ஐ.ஜி. திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்.