டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் நடித்த ரைசா, சமீபத்தில் கண்களின் கீழே கருத்துப்போய், வீங்கிய முகத்துடன் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தோல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, பக்க விளைவு காரணமாக தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவரை குற்றம் சாட்டியதுடன் மேலும் தனக்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட தோல் மருத்துவர், ரைசாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், அவர் தான், தனது பெயரையும் புகழையும் கலங்கப்படுத்தியதற்காக தனக்கு மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் தான் அளித்த சிகிச்சையில் இதுபோன்ற பக்க விளைவுகள் முதலில் ஏற்படுவது சகஜம் என்றும் ஒருசில நாட்களில் இவை மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வரும்போது மது அருந்தாமல், புகை பிடிக்காமல், வலுவான உடற்பயிற்சிகள் செய்யாமல்... என சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் ரைசா அதை செய்ய தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.




