துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமா கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கத்தால் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது.
50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்தார்கள். பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே கூட்டம் வந்தது. அதன்பின்பு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவற்றைப் பார்க்க பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் உள்ள பெரிய தியேட்டர்கள், பெரிய சிங்கிள் தியேட்டர்கள் பலவும் மூடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையில் முக்கிய மல்டிபிளக்ஸ் வளாகமான சத்யம் காம்ப்ளக்சில் சத்யம், சாந்தம் ஆகிய தியேட்டர்களில் கடந்த பல நாட்களாகவே காட்சிகள் நடக்கவில்லையாம். அங்குள்ள சிறிய தியேட்டர்களை மட்டுமே திறந்து வைத்துள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டுவது அரிதாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும் என்ற பெரும் கவலையில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.