ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'த்ரிஷயம்'. அப்படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 2015ல் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றது.
தற்போது 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அதே குழு உருவாக்கியுள்ளது. படம் பிப்ரவரி 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முதல் பாகக் கதையின் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
முதல் பாகத்தை கமல்ஹாசன் ரீமேக் செய்தது போல இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்வாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கமல்ஹாசன் ஏற்கெனவே ஆரம்பித்த 'இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கிறான்' ஆகிய படங்களை முடித்தாக வேண்டும். அதற்குப் பிறகே அவர் 'பாபநாசம்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அப்படியே இரண்டாம் பாகம் உருவானாலும் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள். எனவே, வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும். அப்படி நடிக்க வைத்தால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுப்பது பொருத்தமாக இருக்காது. எனவே, 'பாபாநாசம் 2' படம் உருவாக வாப்பில்லை என்றே தோன்றுகிறது.