தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான லோகா சாப்டர் 1 : சந்திரா படம் 200 கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் உமனாக கலக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை எழுதியவர் நடிகை சாந்தி பாலச்சந்திரன். தரங்கம், ஜல்லிக்கட்டு, குல்மொஹர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற சாந்தி. தமிழில் 'ஸ்வீட் காரம் காபி' தொடரில் நடித்திருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
லோகா படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: 'லோகா' என் இதயத்திற்குப் மிகவும் நெருக்கமானது. டொமினிக் மற்றும் லோகா குழுவோடு சேர்ந்து நாட்டுப்புறக் கதைகள், கற்பனை, வலுவான பெண் கதையை ஒருங்கிணைப்பது சவாலானதோடு நிறைவான பயணமாக இருந்தது. உலகம் முழுவதும் பார்வையாளர்கள் இப்படத்தை இத்தனை அன்போடு ஏற்றுக் கொள்வதைப் பார்க்கும் போது நான் அளவிட முடியாத நன்றியுணர்வில் மூழ்குகிறேன்.
சேப்டர் 1 போலவே, சேப்டர் 2விலும் எனது பணி தொடர்கிறது. எங்கள் திறமையான கூட்டாளர்களை உற்சாகப்படுத்தும் திரைக்கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதே எனது ஆசை. அதோடு நடிப்பையும் தொடர்வேன். இரண்டும் எனது இரண்டு கண்கள் போன்றது. என்கிறார்.