என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகை தமன்னா சினிமாவில் நடிப்பதோடு சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் என் முகத்தில் பருக்கள் வந்தால் அதற்கென தனியாக சிகிச்சை எதுவும் செய்து கொள்வதில்லை, காலை எழுந்ததும் பிரஷ் பண்ணாமல் வாயில் ஊரும் உமிழ்நீரை தொட்டு வைப்பேன். அதுவாகவே சரியாகி விடும் என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு தோல்மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷர்மா என்பவர் கூறும்போது "இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது. பிரபலங்கள் இதுபோன்ற பரிசோதிக்கப்படாத சிகிச்சை முறைகளை பற்றி பொதுவெளியில் பேசும்போது, மக்கள் புரிந்து கொள்ளாமல் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு தோல் மருத்துவரும் இத்தகைய சிகிச்சையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்" என்கிறார்.
ஆனால் சில நாட்டு மருத்துவர்கள் தங்கள் பதிவில் "தமன்னா சொல்வது சரிதான். மனிதனுடைய உமிழ்நீரில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அது சிறிய வகை புண்களை சரி செய்யக்கூடியது. மருத்துவம் வளராத காலத்தில் மனிதர்கள் காயங்களை ஆற்றுவதற்கு உமிழ்நீரைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.