‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
ரொம்பவே குறைவான சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் ஒன்று நடிகர் மம்முட்டிக்கு தற்போது கிடைத்துள்ளது. மம்முட்டி சினிமாவில் நுழைவதற்கு முன்பு எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கலைக்கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு அரசு கலைக்கல்லூரியில் சட்டம் படித்தார். இந்த நிலையில் தற்போது மகாராஜா கலை கல்லூரியில் மம்முட்டியின் திரையுலக வாழ்க்கை ஒரு பாடமாக பாட புத்தகத்தில் இணைக்கப்பட்டது.
நான்கு வருட பிஏ வரலாறு (ஹானர்ஸ்) படிப்பை படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்கான 'ஹிஸ்டரி ஆப் மலையாளம் சினிமா' என்கிற புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மம்முட்டி மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து முதன்முதல் பட்டம் வாங்கிய தாட்சாயினி வேலாயுதம் என்கிற பெண்ணின் வாழ்க்கையும் இதே வருடத்திற்கான இந்திய சமூக அரசியல் என்கிற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.