தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்குத் திரையுலகினருக்காக 'நந்தி விருதுகள்' வழஙகப்பட்டு வந்தது. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலமாகப் பிரிந்த பிறகு விருதுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா அரசு 'கட்டார்' விருதுகள் என தெலுங்குத் திரையுலகத்தினருக்காக புதிய பெயரில் விருதுகளை வழங்குவதாக அறிவித்து, சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல விருதுகளை அறிவித்தார்கள். நேற்று அந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றார்கள். 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசலில் ஒரு பெண் உயரிழந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனையும் கைது செய்தது தெலுங்கானா அரசு. அதனால், இந்த விழாவில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்வாரா என்ற ஒரு சந்தேகம் நிலவியது.
அதையெல்லாம் பொருட்படுத்தால் அல்லு அர்ஜுன் நேற்று நேரில் வந்து விருது பெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, முதல்வர் ரேவந்த் ரெட்டி அடுத்தடுத்து அமர்ந்திருந்ததும் பேசப்பட்டது.