கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது டிக்கெட் கட்டண உயர்வு கோரி அந்த மாநில அரசுகளிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்பின் அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படத்திற்கேற்றபடி டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிப்பார்கள்.
இதுநாள் வரையில் தயாரிப்பாளர்களே நேரடியாக ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்து வந்தார்கள். இனி, அப்படி செய்யக் கூடாது, சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருந்தார். அதன்படி அவர் நடித்து இந்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்திற்காக அதன் தயாரிப்பாளர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மூலம் ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். அதே சமயம், தெலங்கானா அரசுக்கு நேரடியாகவே விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் பிறப்பித்த உத்தரவை அவர் நடித்த முதல் படமே பின் தொடர்வது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.