'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

நடிகர் கமல்ஹாசன், 'தக்லைப்' பட விழாவில் கன்னடம் தமிழிலிருந்து உருவானது என்று பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் 'தக்லைப்' படத்தின் பேனர்களும் கிழித்து எறிந்து வருகிறார்கள். இதன் காரணமாக கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அந்த படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிப்போம் என்று அந்த மாநிலத்தின் அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில், ''தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியிருப்பது கர்நாடகா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. அதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்லி அங்குள்ள கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி என்பவர் பெங்களூரு ஆர்.டி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது ஒரு புகார் அளித்துள்ளார். என்றாலும் அந்த புகார் அடிப்படையில் பெங்களூரு காவல் நிலையம் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.




