செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சிவகங்கை மாவட்டம் சிக்கனம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக் கருப்பி. இவரது கணவர் குமார். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது மகளின் காதணி விழாவுக்காக தகர உண்டியலில் சிறுக சிறுக ஒரு லட்ச ரூபாய் பணத்தை சேர்த்து வைத்திருக்கின்றார் முத்துக் கருப்பி. அந்த உண்டியலை வீட்டுக்குள்ளேயே குழித்தோண்டி புதைத்து வைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் அந்த தகர உண்டியலுக்குள் கரையான் சென்று அந்த ரூபாய் நோட்டுகளை அரித்து இருக்கிறது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அந்த உண்டியலை முத்துக்கருப்பி திறந்து பார்த்தபோது, ரூபாய் நோட்டுகளை கரையான் அரித்து சேதப்படுத்தி இருப்பதை பார்த்து பலத்த அதிர்ச்சி அடைந்தவர் கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அப்படி அவர் கதறுவதை பார்த்த ஒருவர், அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அந்த பெண்ணை அழைத்து கரையான் அரித்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் தான் மாற்றி தருவதாக உறுதி அளித்து இருக்கிறாராம்.
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், முத்துக் கருப்பி மற்றும் அவரது கணவர் குமார் ஆகிய இருவரையும் சென்னைக்கு வர வைத்து தனது மாற்றம் தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண உதவி செய்திருக்கிறார். அப்போது கரையான் அரித்த அந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கி பார்த்துள்ளார் லாரன்ஸ். அதையடுத்து அந்த பெண்ணிடத்தில் ஒரு லட்ச ரூபாயை தனது சார்பில் அவர் கொடுத்தபோது கண்ணீர் மல்க வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.