செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இந்திய அளவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகளாகக் கருதப்படுவது 'பத்ம' விருதுகள். முதற்கட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
தமிழ் நடிகர் அஜித், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்கள் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து பத்மபூஷன் விருதைப் பெற்றார்கள்.
தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, தெலுங்கு வழக்கப்படி 'பஞ்சகட்டு' பேட்டி, பட்டு சட்டை அணிந்து விருதைப் பெற்றார். 57 வருடங்களுக்கு முன்பாக அவரது அப்பா என்டி ராமராவ் பத்மஸ்ரீ விருதைப் பெற்றபோது அணிந்த 'பஞ்சகட்டு' கலாச்சார ஆடையையே பாலகிருஷ்ணா அணிந்ததை தெலுங்கு மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
ஒரே குடும்பத்தில் பத்ம விருதுகளைப் பெறுவது அபூர்வமாக நடக்கும் ஒன்று. அப்பா என்டிஆர் பத்மஸ்ரீ விருதையும், மகன் பாலகிருஷ்ணா பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்கள். என்டிஆருக்கு இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளார்.