தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். ஜென்டில்மேன் தொடங்கி கேம் சேஞ்சர் வரை அவரின் பிரமாண்டங்கள் தொடருகின்றன. அதேசமயம் அவரின் கடைசி இரண்டு படமான கமலின் ‛இந்தியன் 2', ராம் சரணின் ‛கேம் சேஞ்சர்' ஆகியவை தோல்வியை தழுவின.
இந்நிலையில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக ரூ.10.11 கோடி மதிப்பிலான அவரின் 3 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.