Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

20 பிப், 2025 - 05:52 IST
எழுத்தின் அளவு:
The-theater-tested-for-25-minutes-and-fined-one-lakh

சமீபகாலமாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாகவும் அதன் பிறகு இடைவேளை விட்டு மீண்டும் படம் தொடங்குவதற்கு முன்பாகவும் அதிக அளவிலான தனியார் விளம்பரங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் தங்களிடம் புகாராக வந்த ஒரு வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பெங்களூருவில் உள்ள பிரபலமான ஐநாக்ஸ் திரையரங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை புகார்தாரருக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

2023ல் ஒரு தம்பதியர் பெங்களூருவில் சாம் பகதூர் பகுதியில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் மாலை 4.05 மணி காட்சி பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்துள்ளனர். ஆனால் காட்சி 4.30 மணிக்கு தான் துவங்கியது. கிட்டத்தட்ட 25 நிமிட நேரம் தனியார் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன் பின்னரே படம் துவங்கியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சம்பந்தப்பட்ட நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது நுகர்வோருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய காரணத்திற்காக 20 ஆயிரம் ரூபாயும் வழக்கு உள்ளிட்ட செலவினங்களுக்காக 80 ரூபாயும் என ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என திரையரங்கு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக திரையரங்கில் 25 நிமிடம் ஓடிய விளம்பரங்களை மொபைலில் படம் பிடித்து நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பித்தார். இது பைரசி வீதிகளின்படி தவறு என தியேட்டர் நிர்வாகம் வாதிட்டது. ஆனாலும் ஆதாரத்திற்காக இப்படி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதை மட்டுமே புகார்தாரரால் படம் பிடிக்கப்பட்டது என்றும் திரைப்படம் அல்ல என்றும் கூறி தியேட்டரின் வாதத்தை நீதிமன்றம் ஒதுக்கி தள்ளியது.

அது மட்டுமல்ல அரசு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட வேண்டி இருக்கிறது என்ற தியேட்டர் தரப்பில் வைக்கப்பட்ட இன்னொரு வாதத்திற்கு பதில் அளித்த நீதிமன்றம், எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் ஒளிபரப்பி முடிக்க வேண்டுமே தவிர பொழுதுபோக்கிற்காக தானே படம் பார்க்க வருகிறார்கள், அவர்களுக்கு வேறு வேலை இருக்காது என்று நினைத்து அவர்களது நேரத்தை வீணடிக்க எந்தவிதமான உரிமையும் திரையரங்குகளுக்கு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குட்டு வைத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியதுஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் ... இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in