உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

தேவரா படத்திற்கு பின் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்து கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினா தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளனர். ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளவில்லை. மார்ச் மாதத்தில் இருந்து தான் ஜூனியர் என்டிஆர் சம்மந்தப்பட்ட காட்சிகளைக் படமாக்கவுள்ளனர்.