பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

புராணங்கள், நாட்டுப்புற கதைகள், தமிழ் நாடகங்கள் சினிமாவாக தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் பிரெஞ்சு நாடகம் ஒன்றும் சினிமாவாக தயாரானது. ஆரம்பகால திரைப்பட எழுத்தாளரான கொத்தமங்கலம் சுப்பு ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்தார். இவர் எழுதிய பல நாடகங்களும் திரைப்படமானது. அதில் முக்கியமானது 'தில்லானா மோகனாம்பாள்'.
ஒரு கட்டத்தில் கொத்தமங்கலம் சுப்புவிற்கும் படம் இயக்கும் ஆசை வந்தது. அவர் இயக்கிய முதல் படம்தான் 'கண்ணம்மா என் காதலி'. இந்த படம் 'தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ்' என்ற நாடகத்தை தழுவி உருவானது. யாராவது பிரெஞ்சில் இருந்து திரும்பினால் அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி "தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ் பார்த்தீங்களா?" என்பதாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த நாடகம் புகழ்பெற்றிருந்தது.
கண்ணம்மா என் காதலி படத்தில் எம்.கே.ராதா, எம்.எஸ்.சுந்தரிபாய், நடித்திருந்தார்கள். ஜெமினி ஸ்டூடியோ தயாரித்தது. எம்.டி.பார்த்சாரதி இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதினார். இன்றைய படங்கள் போன்று இரண்டேகால் மணிநேர படமாக உருவானது. படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது இந்த படத்தின் பிரண்டுகள் இல்லை.




