47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |

எஸ் தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'வாடிவாசல்' என கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை அறிவித்த பிறகு வெற்றிமாறன் விடுதலை 1,2 படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணிகளும், சில தொழில்நுட்ப காட்சிகள் சம்மந்தப்பட்ட பணிகளும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளனர். மேலும், வாடிவாசல் படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.