சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்தார், அந்த படம் வெளிவரவில்லை. தற்போது யானை பாகனாக 'படைத் தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி.செல்லையா தயாரிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது “கிராமத்து பின்னணியில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது” என்றார்.