'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

ஹிந்தி இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருந்த ஹிந்திப் படமான 'கர்ணா' படம் டிராப் செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களாக பாலிவுட்டில் தகவல் பரவியது.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். இப்படத்தில் திரவுபதியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
படத்தில் எண்ணற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளதால் முதலில் போட்ட பட்ஜெட்டை விட தற்போது பட்ஜெட் எகிறிவிட்டதாம். சுமார் 500 கோடிக்கும் செலவாகும் என தெரிய வந்ததால் படத்தை டிராப் செய்ததற்காகக் காரணமாகச் சொன்னார்கள்.
ஆனால், படத்தை டிராப் செய்யவில்லை, தற்போதைக்குத் தள்ளி வைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தின் கடைசியில் படத்தை ஆரம்பிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஹிந்திப் படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக உயர வேண்டுமென்றுதான் சென்னையை விட்டு மும்பை சென்று சூர்யா செட்டில் ஆனார்.




