Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தாயின் 50 வருட திரையுலக பயணம் ; பிரித்விராஜ் நெகிழ்ச்சி

20 பிப், 2024 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Mothers-50-year-film-journey;-Prithviraj-is-resilient


மலையாள நடிகர் பிரித்விராஜ் தற்போது முன்னணி நடிகராக மட்டுமல்ல, ஒரு வெற்றிகரமான இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருகிறார். மறைந்த நடிகர் சுகுமாரன் மற்றும் நடிகை மல்லிகா தம்பதியினரின் இளைய வாரிசு தான் பிரித்விராஜ். இவரது அண்ணன் இந்திரஜித்தும் நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் பிரித்விராஜின் அம்மா தனது 50வது வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் பிரித்விராஜ் பேசும்போது, “எனது தந்தை இறந்த சமயத்தில் நானும் என் அண்ணனும் என் அம்மா என்ன செய்யப் போகிறாரோ என்று தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம் என்றால் அதுதான் எங்கள் அம்மா தனி ஆளாக நின்று சாதித்தது. சினிமாவில் 50 வருட பயணத்தை தொட்டுள்ளார். இடையில் சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இப்போது முழுமூச்சுடன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல எனது அம்மாவுடன் நடித்தது, ஒரு டைரக்டராக அவரை இயக்கியது, ஒரு தயாரிப்பாளராக அவருடைய படத்தை தயாரித்தது என வேறு எந்த ஒருவருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி விவகாரம் : கேரளா தியேட்டர் சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்புஓடிடி விவகாரம் : கேரளா தியேட்டர் ... ரிலீஸ் தேதியை மாற்றிய 'ஆடுஜீவிதம்' ரிலீஸ் தேதியை மாற்றிய 'ஆடுஜீவிதம்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)