கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். ஆனாலும் அருள்நிதிக்கு அரசியல் ஆசை இன்றி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 'வம்சம்' படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அருள்நிதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டார். 'டிமாண்டி காலனி' 2ம் பாகத்தின் வெற்றிக்கான வேண்டுதலுக்காக அவர் திருப்பதி வந்ததாக நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.