சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் நேற்றுமுன்தினம் மறைந்தார். அரசு மரியாதை உடன் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதுபற்றி விஜயகாந்த்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் வெளியிட்ட பதிவில், ‛‛உங்களின் இதயப்பூர்வமான இரங்கலுக்கு நன்றி. மக்களின் இந்த ஆதரவு, எங்களின் தந்தை எப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார், எவ்வளவு அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. இந்த இழப்பிலிருந்து நாங்கள் மீண்டும் வர இந்த கடுமையான நேரத்தில் உங்களின் இந்த ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை அளிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.