துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா கேரளாவை சேர்ந்த கிறிஸ்டியன் குடும்பத்தை சேர்ந்தவர். இயற்பெயர் தினா மரியம் குரியன். சினிமாவுக்காக நயன்தாரா ஆனார். இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் அடிப்படையில் கிறிஸ்தவ பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனது கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“அன்பிலும் பிரார்த்தனைகளிலும் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கடவுளை நம்புங்கள். அது உங்களை வாழ வைக்கும் மிகப்பெரிய சக்தி” என்று பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் நேற்று வைரலாக பரவியது.