இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

தமிழ் சினிமாவில் கதை, ஹீரோக்களை கடந்து பல சமயங்களில் இசை தான் ஹீரோவாகவே மாறியுள்ளது. ஒவ்வொரு இசையமைப்பாளரும் போட்டி போட்டு ஹிட் பாடல்களை தருகின்றனர். என்னதான் போட்டி இருந்தாலும் அவ்வபோது ஒரு இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளர் இசையில் பாடல்களை பாடுவது தமிழ் சினிமாவில் அடிக்கடி நடைபெறும்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளிவந்த 'ஜிகிர் தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற நவம்பர் 10ந் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்திலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக 'தீக்குச்சி' எனும் பாடலை பாடியுள்ளார். யுவனுடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். தற்போது இப்பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.




