குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ராகினி திவேதி. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்தார். போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது. தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி, கன்னட சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த ஷீலா என்ற படம் சமீபத்தில் வெளியானது. தமிழில் 'கிக்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் 'ஈமெயில்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். முருகா அசோக்குமார் நாயகனாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள ஆர்த்தி நடிக்க, இரண்டாவது ஹீரோவாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும், பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது, ‛‛ஹீரோயினுக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளோம். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது'' என்றார்.