தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால் தற்போது மீண்டும் அவர் இயக்கும் தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, இயக்குநர்கள் கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது குறித்த புகைப்படத்துடன் ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விஷால்.
அதில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றபோது சரியாக மழையும் வந்தது. இதை எங்களை இறைவனே வாழ்த்தியது போல் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் விஷால். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.