‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். தான் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தில்தான் விஜய்யை அவர் அறிமுகம் செய்தார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக விஜய் வலம் வருகிறார்.
சினிமாவை தாண்டி தற்போது ‛கிழக்கு வாசல்' என்ற ஒரு டிவி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சந்திரசேகர். சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛கடந்த இரண்டு மாதங்களாகவே எனது உடம்பில் எனர்ஜி குறைவாக இருந்தது. அதையடுத்து மருத்துவமனை சென்று ஸ்கேன் பண்ணி பார்த்தபோது, உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதனால் சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இப்படித்தான் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்குமே நன்மையும் நடக்கும். கெட்டதும் நடக்கும். அது எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதோடு பிரச்சனை வருகிறது என்பதற்காக சோர்ந்து போகக்கூடாது. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக அதை எதிர்கொள்ள வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு படத்தில் நடிக்க உள்ள விஜய், இந்த படத்திற்காக அமெரிக்கா சென்று இருந்தார். நேற்று முன்தினம் அவர் சென்னை திரும்பிய நிலையில் தனது தந்தை ஏஸ்.ஏ.சந்திரசேகரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து ‛‛உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து'' என பதிவிட்டுள்ளார் சந்திரசேகர்.
விஜய்யின் அரசியல் முன்னெடுப்பு, அவரின் மக்கள் இயக்கம் தொடர்பாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்கும் மனஸ்தாபம் நிலவுகிறது. இதற்குமுன் பட விழாவில் விஜய் அவரது அப்பாவை கண்டுகொள்ளாமல் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தச்சூழலில் இருவரின் சந்திப்பு மீண்டும் இருவருக்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது.




