ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

ஆசை, ரிதம், நேருக்கு நேர், அப்பு ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் வஸந்த். அதன் பிறகு அவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. கடைசியாக அவர் இயக்கத்தில் திரைக்கு வந்த மூன்று பேர் மூன்று காதல் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஓடிடியில் வெளிவந்த 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைப் பெற்றது. மற்றும் நவரசா வெப் தொடரில் ஒரு பகுதியை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓடிடி தளத்திற்காக வசந்த் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.




