எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார் . 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கதாநாயகியாக நடிக்க நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் அதிதி ஷங்கருக்கு பதிலாகவா அல்லது மற்றொரு கதாநாயகியாகவா நடிக்கவுள்ளார் என்பது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.
தமிழில் ‛நேரம், ராஜா ராணி' போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பின் சினிமாவை விட்டு ஒதுங்கினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் தற்போது நஸ்ரியா நடித்து வருகிறார். இந்தபடம் உறுதியாகும் பட்சத்தில் தமிழில் இவரின் ரீ-என்ட்ரி படமாக இது அமையும்.