'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதும் அவர்களது பிறந்தநாளின் போதும், தீவிரமான ரசிகர்கள் பேனர் கட்டுவது, பட்டாசு வெடிப்பது பிரம்மாண்ட கட்டவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது என கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம் தான். இதை செய்யாதீர்கள் என ஒரு சில நடிகர்கள் பெயரளவில் சொன்னாலும் அதை உறுதிப்பட அவர்கள் தெரிவிப்பது இல்லை. அதனால் சில நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று சூர்யாவின் பிறந்தநாளை ஆந்திராவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் இருவர் கொண்டாட முயற்சி செய்தபோது உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பால்நாடு மாவட்டத்தை உள்ள மொபுலாவரிபலம் என்கிற ஊரில் உள்ள சூர்யாவின் ரசிகர்களான நகா வெங்கடேஷ் மற்றும் புலூரி சாய் என்கிற இரண்டு கல்லூரி மாணவர்கள் சூர்யாவின் பிறந்தநாள் பிளக்ஸ் பேனர் ஒன்றை கட்டுவதற்கு முயன்றனர். அப்போது பேனரில் இருந்த இரும்புக்கம்பி அருகில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதேபோல சில வருடங்களுக்கு முன் நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளுக்காக பிளக்ஸ் பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பிரபல ஹீரோக்கள் இதுபோன்று ரசிகர்கள் தங்களது பிறந்த நாட்களை ரசிகர்கள் கொண்டாடுவதை தடுக்காவிட்டாலும் கூட பாதுகாப்புடன் கொண்டாட வலியுறுத்த வேண்டுமென நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.




