ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு |

சென்னை : நடிகர் ரஜினி பெயரில் போலி முகநுால் பக்கம் துவங்கி, மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் அளித்த மனு : ரஜினி அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கும், இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.
இந்நிலையில், ரஜினி அறக்கட்டளை பெயரில் சிலர், போலி முகநுால் பக்கம் துவங்கி, பரிசு பொருட்கள் வழங்க போவதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இம்மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.




