சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் தங்கை ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்த ஷாம்லி அதன்பிறகு தமிழில் நாயகியாக சில படங்களில் நடித்தார். அவருக்கு போதிய நாயகி வாய்ப்பு கிடைக்காததால் தனது கவனத்தை ஓவியத்தின் பக்கம் திருப்பினார். வெளிநாட்டில் நவீன ஓவிய பயிற்சி பெற்ற ஷாம்லி தற்போது தான் வரைந்த ஓவியங்களை பல்வேறு இடங்கில் கண்காட்சியாக வைத்துள்ளார். சமீபத்தில் துபாயில் ஓவிய கண்காட்சி நடத்திய ஷாம்லி தற்போது சென்னையில் நடத்துகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை போக்கஸ் ஆர்ட் கேலரியில் நேற்று இந்த கண்காட்சி தொடங்கியது. இதன் துவக்க விழாவில் இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் அர்ஜுன், மிர்சி சிவா, நடிகைகள் சுஹாசினி, ஐஸ்வர்யா அர்ஜூன், இயக்குனர் கிருத்திகா உதயநிதி, விஷ்ணுவர்த்தன், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஓவியங்களை பார்த்து ரசித்தனர். வந்திருந்தவர்களை ஷாம்லி, ஷாலினி, இவர்களின் சகோதரரர் ரிச்சர்ட் ஆகியோர் வரவேற்றனர்.