கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
திமுக குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி , அருள்நிதி ஆகிய மூவருமே சினிமாவில் பங்களித்து வருகிறார்கள். இவர்களில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் படங்கள் தயாரிப்பதோடு, பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். தயாநிதி அவ்வப்போது படங்கள் தயாரிக்கும் நிலையில், அருள்நிதி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. உதயநிதி தற்போது அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். அவரின் கடைசி படமான மாவீரன் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே சென்னையில் நடைபெறும் அனைத்து பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறார் உதயநிதி. சென்னை - குஜராத் அணிகள் மோதிய பிளே ஆப் சுற்று போட்டியை கண்டுகளித்தார் உதயநிதி. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியை உதயநிதியுடன் அவரது சகோதரர்களான தயாநிதி, அருள்நிதியும் கண்டுகளித்துள்ளார்கள்.
மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை தனது வெளியிட்டு, ‛‛ஹேப்பி பிரதர்ஸ் டே என்றும் பதிவிட்டு தனது சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அருள்நிதி. மே 24ம் தேதியான இன்று பிரதர்ஸ் டே கொண்டாடப்பட்டு வருவதால் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.