சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

மிர்ச்சி சிவா நடித்த வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. மேலும், பேப்பர் ராக்கெட் என்ற ஒரு வெப் தொடரையும் அவர் இயக்கினார். இது ஜீ5 சேனலில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது மூன்றாவது படத்தை ஜெயம் ரவி- நித்யா மேனன் ஆகியோரை வைத்து கிருத்திகா உதயநிதி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே கிருத்திகா இயக்கிய வணக்கம் சென்னை படத்திற்கு இசையமைத்த அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.




