நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மிர்ச்சி சிவா நடித்த வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. மேலும், பேப்பர் ராக்கெட் என்ற ஒரு வெப் தொடரையும் அவர் இயக்கினார். இது ஜீ5 சேனலில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது மூன்றாவது படத்தை ஜெயம் ரவி- நித்யா மேனன் ஆகியோரை வைத்து கிருத்திகா உதயநிதி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே கிருத்திகா இயக்கிய வணக்கம் சென்னை படத்திற்கு இசையமைத்த அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.