காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இயக்குனர் பாரதிராஜா தனது திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு 'ஆர்' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைத்துள்ளார், அவர்கள் பிற்காலத்தில் பெரிய நடிகைகளாக வளர்ந்தார்கள். அந்த வரிசையில் தற்போது அவரது மகன் மனோஜ் இயக்கும் 'மார்கழி திங்கள்' என்ற படத்திற்கு தேர்வாகி உள்ள புதுமுகத்திற்கு 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டி உள்ளார். இந்த படத்தை சுசீந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் மூலம் என் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் நாயகியை மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இந்த கதையின் நாயகிக்கு ராதிகா, ராதா, ரேவதி, ரேகா போன்று ஆர் வரிசையில் 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டுகிறேன். இவர் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.