ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவில் கிளாமர் ஹீரோயினாக வலம் வந்தவர் ரவீனா டாண்டன் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர். பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து விருதுகளை வென்றவர். தமிழில் ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்த நிலையில் தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், கேஜிஎப்-3 படத்தில் தான் நடிக்க இருப்பது குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், கேஜிஎப் 2 படத்தில் மறைந்த இந்திராவின் மாதிரியான இந்திய பிரதமராக நடித்திருந்தேன். அந்த படத்தின் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது என்று கூறியுள்ள ரவீனா டாண்டன், அடுத்து கேஜிஎப் படத்தின் மூன்றாம் பக்கத்தில் நடிப்பதற்காக செட்டுக்குள் செல்வதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்திலும் எனக்கு ஒரு அழுத்தமான கதா பாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.