வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

முன்னணி இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க பி.வி.கே கேபிடல் என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்த அவர் கொடுத்த காசோலை வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் லிங்குசாமி மீது பி.வி.கே நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த வந்த இந்த வழக்கல் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திரபோசுக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காசோலை தொகையில் 20 சதவிகித்தை கோர்ட்டில் கட்ட தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் லிங்குசாமி மற்றும் அவரது தம்பிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.




