போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் துடிப்பும் துள்ளலுமான கதாநாயகியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் 2014ல் திருமணம், அதன்பிறகு கணவருடன் பிரிவு என சோதனையான காலகட்டத்தை சந்தித்தார். இதனால் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குயின் எலிசபத் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகனாக நரேன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக அச்சுவின்டே அம்மா, ஒரே கடல், மின்னாமினி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்த மாமாங்கம், மிகப்பெரிய ஹிட்டான ஜோசப் அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் தான் இந்த படத்தை இயக்குகிறார்.