சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் துடிப்பும் துள்ளலுமான கதாநாயகியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் 2014ல் திருமணம், அதன்பிறகு கணவருடன் பிரிவு என சோதனையான காலகட்டத்தை சந்தித்தார். இதனால் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குயின் எலிசபத் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகனாக நரேன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக அச்சுவின்டே அம்மா, ஒரே கடல், மின்னாமினி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்த மாமாங்கம், மிகப்பெரிய ஹிட்டான ஜோசப் அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் தான் இந்த படத்தை இயக்குகிறார்.