தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் மதன்பாப். தனது தனித்துவமான சிரிப்பைக் கொண்டே பல படங்களில் நடித்தார். தமிழில் 600 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள மதன்பாப், சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகுவததாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.
தற்போது அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பிரபுதேவாவின் 'பஹிரா' காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 'கோஷ்டி' படத்திலும் நடித்து இருந்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் மற்றும் சந்தானத்துடன் 'கிக்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
“சில காலம் எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. சினிமாவை தாண்டிய சில பிரச்னைகளை சரிசெய்ய வேண்டியது இருந்தது. இப்போது எல்லாவற்றையும் சரி செய்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டேன். எனது பழைய பாணியில் இருந்து விலகி சற்று மாறுலாக பயணிக்க விரும்புகிறேன். பழைய பாணியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன்” என்கிறார் மதன்பாப்.