துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பென்னி தயாள், அண்மையில் சென்னை விஐடி கல்லூரியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேடையில் அவர் பாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்று அவரது தலையில் மோதியது. இதனால் வலி தாங்க முடியாமல் பென்னி தயாள் மேடையிலேயே சுருண்டு உட்கார்ந்தார். இதன் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், தனக்கு நடந்த விபத்து குறித்து விளக்கமளித்த பென்னி தயாள், 'ட்ரோனின் இறக்கை தலையின் பின்புறம் தாக்கிய போது தடுக்க முயன்றேன். அப்போது இறக்கை கைவிரல்களில் பட்டு காயம் ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் புரொபஷ்னல் ட்ரோன் ஆப்ரேட்டர்களை அமர்த்துங்கள். அனைத்து கலைஞர்களும் ஒப்பந்தத்தின் போது ட்ரோன் நமது அருகில் நெருங்க முடியாததை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் கலைஞர்கள், மேடையில் பாடுகிறோம். இது விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.