பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது தனது மனைவி ஜோதிகா, மற்றும் மகன், மகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, தி.நகரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு கட்டி அங்குதான் பெற்றோர், தம்பி கார்த்தி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மட்டும் மும்பையில் தனிக்குட்டித்தனம் சென்றுவிட்டார் என்கிறார்கள். கடந்த வாரம் கூட அந்த மும்பை வீட்டிலிருந்து, ஜோதிகா சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மரியாதை மற்றும் அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புக்கும் மும்பை வீட்டிலிருந்து வந்து போகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.