இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கன்னட திரையுலகிற்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான ‛காந்தாரா' திரைப்படம். இந்தப்படத்தை இயக்குனர் ரிஷாப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். வழக்கமான ஒரு சராசரி கன்னட படம் என்கிற அளவிலேயே வெளியான இந்தப்படம், மேக்கிங் மற்றும் அதில் சொல்லப்பட்ட கதையம்சம் ஆகியவற்றால் தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில் இந்த படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, “தெலுங்கில் எனது தயாரிப்பில் ரிஷாப் ஷெட்டி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார். அதற்கேற்ற கதையும் காலமும் கனிந்து வரும்போது அதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் ரிஷாப் ஷெட்டி தனது அடுத்த படம் பற்றி கூறும்போது, அது என் கையில் இல்லை. கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.