வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண் இருவரும். தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில் சமீபத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதேபோன்று ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதை தனது கனவாகவே வைத்துள்ளார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த்.
இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்லு அரவிந்த் கூறும்போது, “ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இவர்கள் நடிக்க உள்ள படத்திற்கு 'சரண் அர்ஜுன்' என டைட்டிலை கூட ஏற்கனவே நான் முடிவு செய்து, அதை முறைப்படி பதிந்து வைத்து வருடந்தோறும் புதுப்பித்தும் வருகிறேன். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படம் மாஸாக இருக்கும். நிச்சயம் வரும் நாட்களில் இந்த படம் உருவாகியே தீரும்” என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ராம்சரணும் அல்லு அர்ஜுனும் நெருங்கிய உறவினர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதேசமயம் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான எவடு என்கிற படத்தில் நடித்து இருந்தார்கள். ஆனால் இருவரும் ஒரு காட்சியில் கூட ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. காரணம் கதைப்படி அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு முக அறுவை சிகிச்சை செய்யும்போது அவருக்கு ராம்சரண் உருவம் கிடைப்பதாகவும் அதன் பிறகு ராம்சரணை வைத்து கதை நகர்வதாகவும் அந்த படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.




