இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் படத்தில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து ஜெயம் ரவிக்கு அவருடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அது குறித்து ஜெயம் ரவி சற்று முன் தன்னுடைய டுவிட்டரில்,
“அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாள், எனது வருடமாகியது, எனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தை போன்ற ஆர்வத்துக்கும் நன்றி தலைவா. நீங்கள் படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும், பணிவும், ஆசீர்வாதமும் பெற்றேன்,” என குறிப்பிட்டுள்ளார்.




