‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவை அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து விட்டார் பார்த்நதிபன். அதோடு படத்தில் நிர்வாணமாகவும் நடித்திருக்கிறார் பிரிகிடா.
இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: துணை இயக்குனராக சென்ற என்னை பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடிக்கச் சொல்லிவிட்டார். முதலில் தயங்கினேன் பிறகு கதையும், அதற்கான முயற்சியும் என்னை சம்மதிக்க வைத்தது. கதைக்கு ஒரு நிர்வாண காட்சி தேவை அதை உன்னை போன்ற சினிமாவை நேசிக்கத் தெரிந்த ஒருவரால் தான் நடிக்க முடியும் என்றார். ஆனால் இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.
இருவருமே எனது பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சம்மத்தின் பேரில் நடித்தேன். அப்படி நடிப்பதற்கு பல டெக்னிக்கல் விஷயங்கள் இருந்தன என்றாலும் கதைப்படி அது நிர்வாண காட்சி தான். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என்கிறார் பிரிகிடா.