ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு பக்கம் நடிகை கடத்தல் வழக்கு சம்பந்தமான விசாரணை, நடிகர் திலீப்புக்கு நெருக்கடியை கொடுத்து வந்தாலும், அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு இன்னொரு பக்கம் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் திலீப். அந்தவகையில் கடந்த 2018லேயே பறக்கும் பப்பன் என்கிற படத்தில் திலீப் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. கிராமத்தில் இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் பவர் கிடைப்பதாகவும், அதன்பின் நடக்கும் அதிசயங்கள் என்ன என்பதை மையப்படுத்தியும் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம், திலீப்பின் வழக்கு பிரச்னைகள் ஆகியவற்றால் இந்த படம் துவங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் இந்த படம் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்கிற தகவலும் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அனிருத் போன்றவர்கள் இசை மற்றும் சூப்பர்மேன் கதையம்சம் இதெல்லாம் சேர்த்து, இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக திலீப் கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.