தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை நடைபெற்றுள்ளது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு ஒரு மெசேஜ் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், கடவுளுக்கு நன்றி. என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்துள்ளது. அதற்கும் நன்றி. நல்ல உள்ளங்கள் நல்ல தருணங்களில் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதங்கள் எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றியது.
இன்று முதல் என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. என் தங்கமே, இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாறப்போவதை நினைத்து உற்சாகம் கொள்கிறேன். எல்லா நன்மைக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் மற்றும் எதிர்நோக்குகிறோம். எங்கள் அன்பான குடும்பம் மற்றும் சிறந்த நண்பர்களின் முன்பு அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என்று விக்னேஷ்சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.