படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கேரளாவை சேர்ந்தவர் தான் என்றாலும் நடிகை நிவேதா தாமஸ் முழுக்க முழுக்க தனது கவனத்தை செலுத்தி வருவது எல்லாம் தெலுங்கு திரையுலகில் தான். கடந்த எட்டு வருடங்களை கணக்கில் எடுத்து பார்த்தால், தமிழில் பாபநாசம் மற்றும் தர்பார் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதேபோல 2014ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மணிரத்னம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது மலையாளத்தில் எந்தாடா ஷாஜி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா என இரண்டு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். காட்பை பாபு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோக்கள் இருவருடன் நிவேதா தாமசுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.